tag:blogger.com,1999:blog-3407336483817601510.post5676397819389106278..comments2023-04-10T17:11:41.703+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள்: இருப்புக்கு மீள்தல் - 06M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3407336483817601510.post-67090484811788465222009-06-19T14:04:52.698+03:002009-06-19T14:04:52.698+03:00இன்று உங்கள் மருத்துவரை சென்று சந்தித்திருப்பீர்கள...இன்று உங்கள் மருத்துவரை சென்று சந்தித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அவருக்கும் அவர் குழுவுக்கும் நன்றிகள்!<br /><br />இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் ரிஷான்! வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-44782584111584280222009-06-18T17:14:07.099+03:002009-06-18T17:14:07.099+03:00அன்பின் சக்தி,
//வாருங்கள் ரிஷான் நலமுடனும் ,தேக ...அன்பின் சக்தி,<br /><br />//வாருங்கள் ரிஷான் நலமுடனும் ,தேக ஆரோக்கியத்துடனும் ..<br />உங்கள் பேனா பிரசவிக்கும் கவிக்காய் நாம் காத்திருக்கையில், விட்டு விடுவோமா உங்களை ? முகந் தெரியா அந்த உறவுகளுக்கு நன்றிகள் !<br />take care of urself dear friend..//<br /><br />நிச்சயமாக அன்புத் தோழி :)<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-48051293265179001242009-06-18T17:13:08.167+03:002009-06-18T17:13:08.167+03:00அன்பின் கோபிநாத்,
//அந்த மருத்துவ குழுவுக்கு மனமா...அன்பின் கோபிநாத்,<br /><br />//அந்த மருத்துவ குழுவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.<br /><br />உங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்..;)//<br /><br />உங்கள் தொடர்வருகை மகிழ்ச்சி தருகிறது. :)<br /><br />வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-55922599420846215722009-06-18T17:11:58.458+03:002009-06-18T17:11:58.458+03:00அன்பின் வேணு ஐயா,
//ஒரு துன்பகரமான அனுபவத்திலிருந...அன்பின் வேணு ஐயா,<br /><br />//ஒரு துன்பகரமான அனுபவத்திலிருந்து மீண்டு வந்து, வலித்த கணங்கள் ஒவ்வொன்றையும் வார்த்தைக்குள்ளே சுருக்கி எழுதி எங்கள் நெஞ்சை உலுக்கி விட்டீர்கள் ரிஷான்! நூறாண்டு காலம் நோய்நொடியின்றி வாழ்ந்து, இனி வரும் காலங்களில் தன் இன்பயமான தருணங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விழைகிறேன்.//<br /><br />உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும் நண்பரே. இனி எழுத்துக்களிலும் வாழ்விலும் இனிமை கோர்த்து வரட்டும் உங்களதும் எனதும் !<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-4319407245445770802009-06-18T17:10:19.696+03:002009-06-18T17:10:19.696+03:00அன்பின் பூங்குழலி,
//உங்கள் மருத்துவ குழுவினரின் ...அன்பின் பூங்குழலி,<br /><br />//உங்கள் மருத்துவ குழுவினரின் பாசம் நெஞ்சை நெகிழ்விப்பதாக இருக்கிறது ரிஷான் .உங்கள் மருத்துவமனை வாசத்தில் முழுமையும் உங்களை சுற்றியிருந்தவர்களின் பாசத்தையும் பரிவையும் பிராத்தனைகளையும் சுவாசித்துக் கொண்டே இருந்திருக்கிறீர்கள் //<br /><br />ஆமாம் சகோதரி. சிறிதளவேனும் கவலை தோன்றாவண்ணமும், வாழ்வின் மீதான நம்பிக்கை இழக்காவண்ணமும் பார்த்துக் கொள்கிறார்கள்.<br /><br /><br />//என்னைத் தூக்கிவந்து அவரிடம் ஒப்படைத்த கணம் முதல் ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கவரும்போதெல்லாம் நான் சுவாசித்துக்கொண்டிருந்தது பெரிய ஆச்சரியம் தந்தது எனவும் இறைவனுக்கு நன்றி என்றும் சொன்னார்<br /><br />நாங்களும் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம் ரிஷான், உங்களை மீட்டு தந்ததற்கு .இறைவன் உங்களை தொடர்ந்து உங்களை பாதுகாக்கட்டும்//<br /><br />உங்கள் பிரார்த்தனைகள் பலிக்கட்டும் சகோதரி உங்களுக்கும் எனக்கும் !<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-58564568094159903762009-06-18T17:07:57.149+03:002009-06-18T17:07:57.149+03:00அன்பின் பாசமலர்,
//முகம் தெரியாத அந்த மருத்துவரும...அன்பின் பாசமலர்,<br /><br />//முகம் தெரியாத அந்த மருத்துவரும் பிற தாதிகளும் ...எங்களுக்கே மறக்க முடியாதவர்கள் என்று தோன்றுகிறது...<br /><br />மீண்டும் வாழ்த்துகள் ரிஷான்...//<br /><br />பொதுச் சேவை செய்யவரும் அவ்வளவு அன்பானவர்களைப் பார்ப்பதுவும் இதுவே முதல்முறை. ஆச்சரியப்படுத்திவிட்டார்கள். :)<br /><br />வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-29316742049853519372009-06-18T17:06:15.235+03:002009-06-18T17:06:15.235+03:00அன்பின் ஃபஹீமா ஜஹான்,
//இறைவனுக்கு நன்றி
--------...அன்பின் ஃபஹீமா ஜஹான்,<br /><br />//இறைவனுக்கு நன்றி<br />-------------------<br /><br />ஒரு துர்க்காலத்தைப்<br />பரப்பி வைத்துப்<br />புழுங்கித் தவித்தது நீண்ட கோடை<br /><br />நஞ்சுண்ட நாட்களைச்<br />சுமந்தவாறு<br />அரபிக் கடல் மீது<br />ஓயாமல் தத்தளித்தது<br />ஒரு பேரலை<br /><br /><br />ஆருயிர்கள்<br />துடிதுடித்த பொழுதுகளை<br />புரட்டிப் புரட்டிப் படித்து விட்டு<br />தூர எறிந்து போயிற்று<br />விதியின் கொடும் கை<br /><br /><br />இன்று...<br />வீழ்ந்து கிடந்த திசைகள்<br />புத்துயிர்பெற்று நிமிர்கின்றன<br /><br />தலை மீது சுமந்தலைந்த<br />பாறாங்கல்லொன்றை<br />இறக்கி வைத்துவிட்டு<br />விலைமதிப்பற்ற திரவியமொன்றை<br />ஆரமெனச் சூடி வருகிறது<br />சூரியோதயம்<br /><br /><br />நொந்து போன சிறகுகளை<br />மெல்ல மெல்ல அசைத்தவாறு<br />உந்திப் பறந்திடும்<br />உற்சாக வேளைக்காகக்<br />காத்துக் கிடக்கிறது<br />எங்கள் அன்பு "வானம்பாடி"<br /><br /><br /><br />*****************************<br />இறைவனே உனக்கு நன்றி.<br />******************************<br /><br />ஆருயிரே வருக<br /><br />மேதைகளும் மாபெரிய வீரர்களும்<br />மீண்டு வராமற்போன<br />மருத்துவமனைக் கட்டிலொன்றிலிருந்து<br />அதே தீர்க்கமான முடிவொன்றிலிருந்து<br />எழுந்து வந்துள்ளாய்<br /><br /><br />திருநாமங்களையெலாம்<br />உச்சாடனம் செய்து<br />எல்லாம் வல்லவனிடம்<br />உனை மீட்டுத் தரவேண்டி<br />ஏந்தித் தவித்த கரங்களை<br />அழுத்திக் கொண்டிருந்தது<br />அன்பின் கொடும் சுமை<br /><br /><br />உயிரோடு போராடிக் கொண்டிருந்த<br />இன்னுயிரைத்<br />தூர தேசத்தில் விட்டு விட்டு<br />ஊர்ந்தூர்ந்து வந்ததந்தக்<br />கொடிய காலம்<br /><br /><br />இருக்கும் இடத்தை<br />நொந்து போன எண்ணங்களால்<br />நிரப்பி விட்டுத்<br />துயரேறிய பொழுதுகளை<br />இழுத்தவாறு நொண்டி நகர்ந்தன<br />இரு பாதங்கள்<br /><br /><br />செல்லப் பறவையே<br />இறுதியில் நீ வந்தாய்<br />உதிரமெங்கும் கலந்தோடிய நஞ்சிலிருந்து<br />உன் ஜீவனை மீட்டெடுத்து வந்தாய்<br /><br /><br />உறங்க மறந்த இரவின் மீது<br />ஆனந்தக் கண்ணீரைக்<br />கசிய விட்டவாறு<br />வாழ்விலிருந்து நழுவிப் போனதொரு<br />பெரும் வலி<br /><br />என்ன வார்த்தையால் உனை வரவேற்பது<br />எந்தக் கரம் கொண்டு உனை அரவணைப்பது<br />எனத் தெரியாத கடலொன்றுக்கப்பாலிருந்து<br />கையசைக்கிறாய்<br /><br /><br />ஆருயிரே வருக<br />பாக்கியம் புரிந்தவர் நாம்<br />உனை மீளவும் பெற்றிருக்கிறோம்//<br /><br />இந்தக் கவிதைகளை எழுதிய கரங்கள் இன்று வாடிப் போயுள்ளதைக் கேள்வியுற்றேன். மிகைக்கும் கவலையைப் போக்க ஏதேதோ செய்தபடியும், இடையறாமல் பிரார்த்திக் கொண்டுமிருக்கிறேன்.<br /><br />விரைவாக வாருங்கள் சகோதரி !<br />காத்திருக்கிறேன் !!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-50754871635605594142009-06-18T17:03:39.648+03:002009-06-18T17:03:39.648+03:00அன்பின் ஜோசப் பால்ராஜ்,
//வைத்தியரின் அன்பும், பர...அன்பின் ஜோசப் பால்ராஜ்,<br /><br />//வைத்தியரின் அன்பும், பரிவும் நெகிழ வைக்கிறது. இப்படி உடல்நிலை கெட்டுப்போக என்ன மூலக்காரணம்?<br /><br />இனி உடல்நிலையை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் ரிஷான்.<br /><br />அந்த வைத்தியருக்கு எங்கள் அனைவர் சார்பாகவும் நன்றி சொல்லுங்கள்.//<br /><br />நிச்சயமாக நண்பரே !<br />நன்றிகளோடு, உங்கள் அனைவரினதும் பரிவான பிரார்த்தனை பற்றியும் சொல்லிவிடுகிறேன்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-54291275257215439142009-06-16T23:39:01.942+03:002009-06-16T23:39:01.942+03:00வாருங்கள் ரிஷான் நலமுடனும் ,தேக ஆரோக்கியத்துடனும் ...வாருங்கள் ரிஷான் நலமுடனும் ,தேக ஆரோக்கியத்துடனும் .. <br />உங்கள் பேனா பிரசவிக்கும் கவிக்காய் நாம் காத்திருக்கையில், விட்டு விடுவோமா உங்களை ? முகந் தெரியா அந்த உறவுகளுக்கு நன்றிகள் !<br />take care of urself dear friend..Sakthyhttps://www.blogger.com/profile/12209147417091016585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-60536620298543638892009-06-16T13:11:55.789+03:002009-06-16T13:11:55.789+03:00அந்த மருத்துவ குழுவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
...அந்த மருத்துவ குழுவுக்கு மனமார்ந்த பாராட்டுகள். <br /><br />உங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்..;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-74753848017204950712009-06-16T11:04:39.486+03:002009-06-16T11:04:39.486+03:00ஒரு துன்பகரமான அனுபவத்திலிருந்து மீண்டு வந்து, வலி...ஒரு துன்பகரமான அனுபவத்திலிருந்து மீண்டு வந்து, வலித்த கணங்கள் ஒவ்வொன்றையும் வார்த்தைக்குள்ளே சுருக்கி எழுதி எங்கள் நெஞ்சை உலுக்கி விட்டீர்கள் ரிஷான்! நூறாண்டு காலம் நோய்நொடியின்றி வாழ்ந்து, இனி வரும் காலங்களில் தன் இன்பயமான தருணங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விழைகிறேன்.<br /><br />தமிழன் வேணுஆர்.வேணுகோபாலன்https://www.blogger.com/profile/05860444707350303309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-19589935309162799722009-06-16T06:18:16.475+03:002009-06-16T06:18:16.475+03:00உங்கள் மருத்துவ குழுவினரின் பாசம் நெஞ்சை நெகிழ்விப...உங்கள் மருத்துவ குழுவினரின் பாசம் நெஞ்சை நெகிழ்விப்பதாக இருக்கிறது ரிஷான் .உங்கள் மருத்துவமனை வாசத்தில் முழுமையும் உங்களை சுற்றியிருந்தவர்களின் பாசத்தையும் பரிவையும் பிராத்தனைகளையும் சுவாசித்துக் கொண்டே இருந்திருக்கிறீர்கள்<br /><br /><br />என்னைத் தூக்கிவந்து அவரிடம் ஒப்படைத்த கணம் முதல் ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கவரும்போதெல்லாம் நான் சுவாசித்துக்கொண்டிருந்தது பெரிய ஆச்சரியம் தந்தது எனவும் இறைவனுக்கு நன்றி என்றும் சொன்னார்<br /><br />நாங்களும் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம் ரிஷான், உங்களை மீட்டு தந்ததற்கு .இறைவன் உங்களை தொடர்ந்து உங்களை பாதுகாக்கட்டும்பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-64867363881338280422009-06-15T20:14:46.741+03:002009-06-15T20:14:46.741+03:00முகம் தெரியாத அந்த மருத்துவரும் பிற தாதிகளும் ...எ...முகம் தெரியாத அந்த மருத்துவரும் பிற தாதிகளும் ...எங்களுக்கே மறக்க முடியாதவர்கள் என்று தோன்றுகிறது... <br /><br />மீண்டும் வாழ்த்துகள் ரிஷான்...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-24557796580943510302009-06-15T18:59:27.939+03:002009-06-15T18:59:27.939+03:00இறைவனுக்கு நன்றி
-------------------
ஒரு துர்க்கா...இறைவனுக்கு நன்றி<br />-------------------<br /><br />ஒரு துர்க்காலத்தைப்<br />பரப்பி வைத்துப்<br />புழுங்கித் தவித்தது நீண்ட கோடை<br /><br />நஞ்சுண்ட நாட்களைச் <br />சுமந்தவாறு<br />அரபிக் கடல் மீது<br />ஓயாமல் தத்தளித்தது <br />ஒரு பேரலை<br /><br /><br />ஆருயிர்கள் <br />துடிதுடித்த பொழுதுகளை<br />புரட்டிப் புரட்டிப் படித்து விட்டு<br />தூர எறிந்து போயிற்று <br />விதியின் கொடும் கை<br /><br /><br />இன்று...<br />வீழ்ந்து கிடந்த திசைகள்<br />புத்துயிர்பெற்று நிமிர்கின்றன<br /><br />தலை மீது சுமந்தலைந்த<br />பாறாங்கல்லொன்றை<br />இறக்கி வைத்துவிட்டு<br />விலைமதிப்பற்ற திரவியமொன்றை<br />ஆரமெனச் சூடி வருகிறது<br />சூரியோதயம்<br /><br /><br />நொந்து போன சிறகுகளை <br />மெல்ல மெல்ல அசைத்தவாறு<br />உந்திப் பறந்திடும்<br />உற்சாக வேளைக்காகக் <br />காத்துக் கிடக்கிறது<br />எங்கள் அன்பு "வானம்பாடி"<br /><br /><br /><br />*****************************<br />இறைவனே உனக்கு நன்றி.<br />******************************<br /><br />ஆருயிரே வருக<br /><br />மேதைகளும் மாபெரிய வீரர்களும்<br />மீண்டு வராமற்போன<br />மருத்துவமனைக் கட்டிலொன்றிலிருந்து<br />அதே தீர்க்கமான முடிவொன்றிலிருந்து<br />எழுந்து வந்துள்ளாய்<br /><br /><br />திருநாமங்களையெலாம்<br />உச்சாடனம் செய்து<br />எல்லாம் வல்லவனிடம்<br />உனை மீட்டுத் தரவேண்டி<br />ஏந்தித் தவித்த கரங்களை<br />அழுத்திக் கொண்டிருந்தது<br />அன்பின் கொடும் சுமை<br /><br /><br />உயிரோடு போராடிக் கொண்டிருந்த<br />இன்னுயிரைத்<br />தூர தேசத்தில் விட்டு விட்டு<br />ஊர்ந்தூர்ந்து வந்ததந்தக் <br />கொடிய காலம்<br /><br /><br />இருக்கும் இடத்தை<br />நொந்து போன எண்ணங்களால்<br />நிரப்பி விட்டுத்<br />துயரேறிய பொழுதுகளை<br />இழுத்தவாறு நொண்டி நகர்ந்தன<br />இரு பாதங்கள்<br /><br /><br />செல்லப் பறவையே<br />இறுதியில் நீ வந்தாய்<br />உதிரமெங்கும் கலந்தோடிய நஞ்சிலிருந்து<br />உன் ஜீவனை மீட்டெடுத்து வந்தாய்<br /><br /><br />உறங்க மறந்த இரவின் மீது<br />ஆனந்தக் கண்ணீரைக்<br />கசிய விட்டவாறு<br />வாழ்விலிருந்து நழுவிப் போனதொரு <br />பெரும் வலி<br /><br />என்ன வார்த்தையால் உனை வரவேற்பது<br />எந்தக் கரம் கொண்டு உனை அரவணைப்பது<br />எனத் தெரியாத கடலொன்றுக்கப்பாலிருந்து<br />கையசைக்கிறாய்<br /><br /><br />ஆருயிரே வருக<br />பாக்கியம் புரிந்தவர் நாம்<br />உனை மீளவும் பெற்றிருக்கிறோம்ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-13891986325960262642009-06-15T18:47:47.302+03:002009-06-15T18:47:47.302+03:00வைத்தியரின் அன்பும், பரிவும் நெகிழ வைக்கிறது. இப்ப...வைத்தியரின் அன்பும், பரிவும் நெகிழ வைக்கிறது. இப்படி உடல்நிலை கெட்டுப்போக என்ன மூலக்காரணம்? <br /><br />இனி உடல்நிலையை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் ரிஷான். <br /><br />அந்த வைத்தியருக்கு எங்கள் அனைவர் சார்பாகவும் நன்றி சொல்லுங்கள்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.com